16 November 2013

வருவாய் துறை -ஆவணங்கள், பட்டா -2


பட்டா -2
பட்டா என்பது என்ன ?

பட்டா ஏன் முக்கிய ஆவணமாக கருதபடுகிறது ?

மிகப் பெரிய கோடீஸ்வரர் அவர். எல்லையில்லா பரம்பரையான சொத்துக்கள் குவிந்து கிடந்தன. யாருக்கும் எதற்கும் பணிந்து போக வேண்டிய அவசியம் இல்லாதவர். யாரோ ஒரு பேராசைப்பட்ட அரசு அலுவலர் ஒருவரால் அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் விற்பனை செய்ய இயலாமல் கிடந்தன



இந்தக் கோடீஸ்வரரின் சொத்துக்கு அருகில் அரசின் புறம்போக்கு நிலம் இருக்கிறது. சர்வேயர் வந்து நிலத்தை அளவு செய்து குறிப்பிடும் போது, கோடீஸ்வரரின் சொத்தினைப் பார்த்து ஆசைப்பட்டு, ”எனக்கு கொஞ்சம் காசு கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். ”எதற்கு கொடுக்க வேண்டுமென்று ” கேட்டு முடியாதென்றுச் சொல்லி விட்டார் கோடீஸ்வரர். சர்வேயர் இவரின் நில சர்வே எண்களையும் சேர்த்து அரசுப் புறம்போக்கு நிலம் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்து விட, அரசும் இவரின் நிலத்துடன் சேர்ந்து அரசு நிலம் என்று அறிவிப்பு கொடுத்து விட்டது.


இப்பிரச்ச்சினையில் தவறு செய்தவர் சர்வேயர். மேற்படி சொத்தை விற்க முயற்சிக்கும் போது, விஷயம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தெரிய வருகிறது. கோர்ட் படியேறி தீர்ப்பினை வாங்கி விடுகிறார் கோடீஸ்வரர். பட்டா கிடைக்க அப்ளை செய்கிறார். கிடைக்கவில்லை. பட்டா இல்லாமல் யார் தான் இவ்வளவு பெரிய சொத்தினை வாங்குவார்கள்? பிரச்சினை ஆரம்பிக்கிறது.சொத்தின் விலை அடிமாட்டு ரேஞ்சுக்குப் போகிறது.


ஒரு சொத்து இவருக்குச் சொந்தமானது என்றுச் சொல்லக்கூடிய ஆவணங்களில்(டாக்குமெண்ட்) பட்டா என்பது மிக முக்கியமானது என்றாலும், ஒரு சொத்தினை விற்பதற்கு அது தேவையானதா என்று கேட்டால் தேவை என்றுதான் சொல்லுவார்கள். அதுதான் நியாயமும் கூட.



கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கு பட்டா என்பது அவ்வளவு முக்கியமான விஷயமாக இருக்காது. பட்டா இல்லை என்பதற்காக குறைவான விலைக்கு கேட்பார்கள். சொத்தினை வாங்கிய பிறகு பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தால் பட்டா வீடு தேடி வந்து விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் அப்பிராணிகளுக்கு பட்டா இல்லையா, சொத்தே வேண்டாம் என்று தோன்றும்.


சொத்து வாங்கி விற்கும் போது பத்திரங்கள் மட்டும் மாறி இருக்கும். ஆனால் பட்டா மாறாது. அதற்காக பழைய பட்டாவை வைத்துக் கொண்டு யாரும் சொத்து எனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடினால் “உள்ளே” போக வேண்டியதுதான். விவரம் தெரியாதவர்களிடம் வேண்டுமானால் சிலர் விளையாடலாம். விவரமானவர்களிடம் விளையாட ஆரம்பித்தால் வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும்.


பட்டால் தான் தெரியும் பட்டா வின் மகிமை

மதுரை, மே.16-

போலி பட்டா தயாரித்து ரூ.28 லட்சம் மோசடி செய்த வருவாய் ஆய்வாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மேலக்கோபுர வாசலைச் சேர்ந்தவர் பொன்னழகு, பெத்தானியாபுரம் ரவி, மேலக்காலை சேர்ந்த கிருபாகரன். இவர் திருமங்கலத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.


இவர்கள் ஆனையூர் பகுதியைச் சேர்ந்த பொது மக்களிடமும், மகளிர் சுயஉதவிக்குழுவினரிடமும் அரசிடமிருந்து இலவச வீட்டுமனை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் 140 பேரிடம் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.28 லட்சம் வசூல் செய்தனர். பின்னர் போலியாக பட்டா தயாரித்து கலெக்டர் போல் கையெழுத்திட்டு ரப்பர் ஸ்டாம்பு வைத்து அவற்றை பணம் வசூலித்த பொதுமக்களிடம் கொடுத்தனர்.


இதோடு மட்டுமல்லாமல் பட்டா வாங்கிய அனைவரையும் நம்ப வைப்பதற்காக, ஆனையூர் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பூமிபூஜையும் நடத்தினர். இதனால் பட்டா பெற்றவர்கள் நம்பிக்கையுடன் அங்கிருந்து சென்றுவிட்டனர்.


பட்டா வாங்கியவர்கள் சில நாட்கள் கழித்து தங்கள் இடங்களில் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் உண்மையானவையா? என்று கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்தனர்.


அப்போதுதான் அவை போலி பட்டா என்பதும், பணத்தை வசூலித்து ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆனையூரைச் சேர்ந்த சேது மனைவி ராணி என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.


இதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்க வேலு, இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, ரவிக்குமார் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்து பொன்னழகு, ரவி, வருவாய் ஆய்வாளர் கிருபாகரன் ஆகியோரை கைது செய்தனர்.


இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் சொத்து விற்பனைக்கு பட்டா தேவையா இல்லையா என்பதை.

No comments:

Post a Comment